- மணப்பெண்
- முதல் அமைச்சர்
- காஞ்சிபுரம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காஞ்சிபுரம் ஒன்றிய அங்கம்பாக்கம்...
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தமிழக முதல்வருக்கு பள்ளி மாணவர்கள் கடிதம் எழுதும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் நடுநிலைப் பள்ளியில் உலக கடிதம் எழுதும் நாளையொட்டி சார்லஸ் டார்வின் அறிவியல் கழகம் சார்பில் கடிதம் எழுத முயற்சி நடைபெற்றது. நேற்று 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் வரை 80 மாணவர்கள் கடிதம் எழுதி அஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அக்கடிதங்களில், எங்கள் மாணவர்கள் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு, ‘அவர் அறிவித்துள்ள புதுமைப்பெண் திட்டத்திற்கு நன்றி தெரிவித்தும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு, இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு நன்றி தெரிவித்தும், வட்டாரக்கல்வி அலுவலர்கள் 1, 2 ஆகியோருக்கு பள்ளியில் நடைபெற்ற தேசிய அறிவியல் தினம் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வில் பங்கேற்றமைக்கு நன்றி தெரிவித்தும், தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்கு அவர்களது சிறப்பான கற்றல் கற்பித்தல் மற்றும் கல்வி சார் செயல்பாடுகளில் ஈடுபடுத்துதல் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவித்தும் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்….
The post காஞ்சிபுரம் அருகே முதல்வருக்கு மணவர்கள் கடிதம் appeared first on Dinakaran.